ரப்பர் கம்பிகளால் தமிழக மீனவர்களைத் தாக்கிய சிங்கள கடற்படை- 8 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்களை சிங்களக் கடற்படையினர் நடுக்கடலில் மறித்து சுற்றி வளைத்து ரப்பர் கம்பிகளால் தாக்கினர். இதில் 8 மீனவர்கள் காயமடைந்தனர்.

ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த மீனவர்கள் எட்டு பேர் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். 2 படகுகளில் இவர்கள் கடலுக்குள் சென்றனர். நடுக் கடலில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு சிங்களக் கடற்படையினர் வந்தனர். தமிழக மீனவர்களின் படகுகளை வழிமறித்த அவர்கள், மீனவர்களை ரப்பர் கம்பிகளால் கடுமையாக தாக்கினர். இதில் வலி தாங்க முடியாமல் தமிழக மீனவர்கள் அலறித் துடித்தனர். பின்னர் சிங்களக் கடற்படையினர் அங்கிருந்து போய் விட்டனர்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆரோக்கியநாதன் உள்ளிட்ட மீனவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் இரண்டு படகுகளும் சிங்களக் கடற்படைத் தாக்குதலில் சேதமடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+