சேது சமுத்திர கால்வாய் வழக்கு- டிசம்பருக்கு ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு அவகாசம் கோரியதால் டிசம்பர் மாதத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என்று உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் மாதம் 3ந் தேதிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் விசாரணையின் போது மத்திய அரசு பதிலளிக்க 6 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications