புதுக்கோட்டை தனியார் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்கள் மோதல்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சத்தியமங்கலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியில் இன்று காலை இரு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் மாணவர்களிடையேயான மோதல் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் விடுதி மாணவர்களிடையே மோதல் நிகழ்ந்து பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்று சத்தியமங்கலம் பகுதி பொறியியல் கல்லூரியில் இரு பிரிவு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில் 20 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் சிலருக்கு கல்லூரி முதலுதவி சிகிச்சை மையத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications