இன்று மகாளாய அமாவாசை: முன்னோர்களின் ஆசிக்காக புனித நீராடிய பக்தர்கள்

Subscribe to Oneindia Tamil

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்.

முன்னோர்களின் ஆசி

மகாளயபட்ச காலத்தில் முன்னோர்கள் பூவுலகிற்கு வந்து நம்மை ஆசிர்வதிக்கின்றனர் என்பது நம்பிக்கை. புரட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி தொடங்கி அமாவசை வரை 15 நாட்களும் மகாளய பட்சம் எனப்படுகிறது. இந்த நாட்களில் அன்னதானம் வழங்குவது சிறப்பானதாக கருதப்படுகிறது. மகாளய அமாவாசை நாளில் கடல், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கு பித்ரு தர்பணம் அளிப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

புனித நீராடிய பக்தர்கள்

மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்படுவதை ஒட்டி ரமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்பணம் அளித்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள், தொடர்ந்து கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடினர். அதன் பிறகு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் காரணமாக ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேபோல் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலும், வேதாரண்யம் கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர். திருச்சி அம்மாமண்டபம் படித்துறையில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+