Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே மாசமே உலகம் அழியப் போகுதா, மாண்புமிகு விஸ்வநாதன்?!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
திண்டுக்கல்: டிசம்பர் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு விடும். இறுதியாக ஜூன் மாதத்திற்கு பின்பு தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டே இருக்காது. இதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் புயல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதுவரை பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.

அதிமுகவின் 41வது ஆண்டு விழாவையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய விஸ்வநாதன் கூறுகையில், புரட்சித் தலைவருக்குப் பின்னால் இயக்கத்தை அழிக்க எத்தனையோ கபட நாடகத்தை நடத்தி பார்த்தார்கள். ஆனால், புரட்சித் தலைவி இதய தெய்வம் அம்மா அவர்கள் தலைமை ஏற்று கட்சிக்கு புத்துயிர் கொடுத்தார். தமிழகத்தில் 3வது முறையாக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

அதிமுக தொடங்கப்பட்டு 41 ஆண்டுகளில் 23 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. திமுக வெறும் 19 ஆண்டுகள் தான் ஆட்சியில் இருந்துள்ளது.

தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள். இதனால் இதனால் மக்களிடம் அம்மாவுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

மின்வெட்டு பிரச்சனைக்கு போராட்டம் நடத்த திமுகவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. கடந்த திமுக ஆட்சியில் மின்சார உற்பத்திக்கும், தேவைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காணப்பட்டது. புதிய மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்தவில்லை. மின் வெட்டுக்கு திமுக தான் காரணம் என்றாலும், நமது அம்மா அவர்கள் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திட்டங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் வேண்டும். திமுக ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் புதிய உற்பத்தி திட்டம் வெறும் 211 மெகாவாட் தான். அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் போடப்பட்டத் திட்டம் 2,034 மெகாவாட் ஆகும்.

இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூரில் 300 மெகாவாட் மின்உற்பத்தி தொடங்கும். அதேபோல் வல்லூர், நெய்வேலி, தூத்துக்குடி ஆகிய மின் திட்டங்களும் உற்பத்தியைத் தொடங்கிவிடும். இதனால் டிசம்பர் மாதம் முதல் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு விடும். இறுதியாக ஜூன் மாதத்திற்கு பின்பு தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டே இருக்காது.

இதற்காக மாண்புமிகு அம்மா அவர்கள் புயல் வேகத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனது தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்துள்ளார். திங்கள்கிழமைதோறும் அந்த கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

மின் வெட்டுக்கு அம்மா நிச்சயம் நிரந்தர தீர்வு காண்பார். அதுவரை பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் விஸ்வநாதன்.

இவர் பேசிக் கொண்டிருந்தபோது திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் கரண்ட் கட் ஆகவில்லை.

ஜூன் மாதம் முதல் எப்படி மின்வெட்டே இல்லாமல் போகும்.. ஒருவேளை மே மாசமே உலகம் அழிஞ்சுருமா!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+