கிரானைட் கொள்ளை பழனிச்சாமி வீட்டில் 10 கிலோ நகை கண்டுபிடிப்பு
மதுரை: தமிழகத்தை உலுக்கிய கிரானைட் கொள்ளையின் பிதாமகனான பி.ஆர்.பழனிச்சாமியின் வீட்டில் 10 கிலொ நகைகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது. மேலும் பி.ஆர். பழனிச்சாமிக்கு சுமார் 24 ஆயிரம் ஏக்கர் சொத்துகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மதுரை மாவட்டம் கீழவளவு பகுதிகளில் கிரானட் நிறுவனங்கள், பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு இருப்பது அண்மையில் கண்டறியப்பட்டது. மொத்தம்19 நிறுவனங்களில் முறைகேடு நடந்திருந்தாலும் பி.ஆர்.பி. நிறுவனம் மீது மட்டும் அதிக புகார்கள் அடுக்கப்பட்டன. தற்போது பி.ஆர்.பி, நிறுவன அதிபர் பழனிச்சாமி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். மேலும் அவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.இதில் 3 பீரோக்களில் 10 கிலோ தங்க நகைகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதேபோல் பழனிச்சாமிக்கு 24 ஆயிரம் ஏக்கர் சொத்து இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த நகை மற்றும் சொத்துக்களை போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கெனவே கிரானைட் அதிபர்களிடம் இருந்து 19 பஸ்கள், 17 கார்கள், பொக்லைன் என 50 கனரக வாகனங்களை பறிமுதல் செய்துள்ள நிலையில் மு.க. அழகிரி மகன் துரை தயாநிதி உட்பட 120 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications