சேது சமுத்திர திட்டத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமாம்: சொல்கிறார் ஜி.கே.வாசன்
திருச்சி: தென் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவான சேது சமுத்திர திட்டம் மூலம் நாட்டின் பொருளாதாரம் உயரும். எனவே இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருச்சிக்கு நேற்று வந்த மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன், மறைந்த முன்னாள் எம்.பி.அடைக்கலராஜின் வீட்டுக்கு சென்று அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது ஜி.கே.வாசன் கூறியதாவது,
தமிழகத்தில் மின் பற்றாக்குறை தான் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதற்கு காரணம் என்ன என்பதை அனைத்து தரப்பு மக்களும் 100 சதவீதம் உணர்ந்துள்ளனர். எனவே கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்மை நிலையை புரிந்து கொண்டு, போராட்டத்தை கைவிட வேண்டும்.
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க, கூடங்குளம் அணு உலை எந்த அளவுக்கு முக்கியம் என்பது அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. தமிழக அரசும், பிற கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையை திறக்கவும், மின்வெட்டை போக்கவும் மத்திய அரசுக்கு, மாநில அரசு துணை நிற்க வேண்டும். மின்வெட்டுக்கு காரணம் என்ன, காரணமானவர்கள் யார்? என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்து மதிப்பீடு செய்து வைத்துள்ளனர்.
சேது சமுத்திர திட்டம், தென் மாவட்ட மக்களின் நீண்டகால கனவு திட்டமாகும். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும். இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்!












Click it and Unblock the Notifications