அவதூறு வழக்கு: அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு போராட்டம் ஒன்றில் பேசிய கெஜ்ரிவால், டெல்லி மாநில அரசு முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி கடுமையாக சாடியிருந்தார். இதனைக் கண்டித்து கெஜ்ரிவால் தமது கருத்தை திரும்பப் பெற 2 நாட்கள் கால அவகாசம் கொடுத்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்.
டெல்லி மாநில அரசியலில் குதிப்பதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறார் கெஜ்ரிவால். முன்னரே அவரது குருவான அன்ன ஹசாரேவும் கூட கெஜ்ரிவாலை டெல்லியில் போட்டியிடுமாறு கூறியிருந்தார். இதனால் டெல்லியில் அடிக்கடி போராட்டங்களை கெஜ்ரிவால் நடத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் ஷீலா தீட்சீத் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications