இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா கே.பி? - டெல்லி வருகிறார் கோத்தபாய ராஜபக்ச

Subscribe to Oneindia Tamil

KP
டெல்லி: தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக இருந்து பின்னர் இலங்கையால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆதரவானவராக மாறி விட்ட கே.பி என்ற குமரன் பத்மநாபாவை இந்தியாவிடம் ஒப்படைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த நாளை மறுநாள் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச டெல்லி வர உள்ளதாக கூறப்படுகிறதது.

விவகாரம் 1:

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இலங்கையின் அரசியல் சாசனத்தில் 13-வது திருத்தம் நடைமுவ்றைப்படுத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டநாளைய கருத்து. அண்மையில் டெல்லி வந்திருந்த இலங்கை தமிழ் எம்.பிக்களிடமும் இதுவே வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக சிங்களத் தலைவர்கள் அனைவருமே 13-வது அரசியல் திருத்தம் அமல்படுத்தப்பட்டால் தனித் தமிழ் ஈழத்துக்கு முதல் படியாக அமையும் என்று கூறிவருகின்றனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவின் தம்பியும் இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபாய ராஜபக்ச, 13-வது அரசியல் திருத்தத்தை ரத்து செய்வோம் என்று பகிரங்கமாக கூறியிருந்தார்.

விவகாரம் 2:

இந்நிலையில் கேபி மீது வழக்கு தொடரப் போவதில்லை என்றும் அவர் அரசு தரப்பு சாட்சியாக இருப்பார் என்றும் இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் கேபியை தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது

கோத்தபாயவுக்கு அழைப்பு

இந்த இரண்டு விவகாரங்கள் குறித்து விவாதிக்க டெல்லி வருமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று கோத்தபாய வரும் புதன்கிழமை இந்தியா வரக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+