டி.ஆர்.பாலு, பழனி மாணிக்கம் இடையே திடீர் 'முட்டல்'.. கருணாநிதி பஞ்சாயத்து!

பாலு, மாணிக்கம் இருவருமே ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையே முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது. பாலுவுக்கு டெல்லியில் நல்ல செல்வாக்கு உள்ளதால் தன்னை மீறி அவர் செயல்பட்டு வருவதாக குமுறியபடி இருந்தார் பழனி மாணிக்கம். இந்த நிலையில் இவர்களது மோதல் தற்போது பகிரங்கமாகியுள்ளது.
நாடாளுமன்ற திமுக குழு தலைவராகவும் உள்ள டி.ஆர்.பாலு விளம்பரத்துக்காக தன்னிச்சையாக ரயில்வே திட்டங்களை அறிவிக்கிறார் என்று பழநிமாணிக்கம் சனிக்கிழமை குற்றம்சாட்டினார். வரும் லோக்சபா தேர்தலில் தஞ்சையில் போட்டியிட டி.ஆர்.பாலு விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தஞ்சையில் அதிகமாக உழைக்கிறார் என்றும் பழநிமாணிக்கம் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் பழநிமாணிக்கம் நேற்று சந்தித்தார். அப்போது பாலு குறித்து ஏன் புகார் கூறுகிறீர்கள் என்று கருணாநிதி விளக்கம் கேட்டதாக தெரிகிறது. அப்போது பாலு குறித்து பழனி மாணிக்கம் புலம்பித் தள்ளி விட்டதாக தெரிகிறது.
தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறேன். இதுவரை டி.ஆர்.பாலு அறிவித்த திட்டங்கள் குறித்து என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலை டி.ஆர்.பாலு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார் என்று பழனி மாணிக்கம் கூறியதாக தெரிகிறது.
பழனி மாணிக்கத்தின் குமுறலைக் கேட்டுக் கொண்ட கருணாநிதி பாலுவிடம் விசாரிப்பதாக கூறியதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications