பாலத்தை காணோம்! வடிவேல் பாணியில் புகார்: திருடனை மடக்கி பிடித்த போலீஸ்
பிராக்கோ: போஸ்னியா நாட்டில் இரும்பு பாலத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து திருடி சென்ற திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான போஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ளது பிராக்கோ. விளைநிலங்கள் சூழ்ந்த இப்பகுதியில் ஆற்றை கடக்க இரும்பு பாலம் ஒன்று இருந்தது. 40 அடி நீளம் கொண்ட அந்த பாலம் பல டன் எடை கொண்டது. 1980ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலத்தை காணவில்லை என்று அந்த பகுதி மக்கள் புதன்கிழமையன்று போலீசில் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகளை திருடும் நபரின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 29 வயதுடைய அந்த திருடனின் வீட்டுக்கு வெளியே திருடப்பட்ட பாலம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.இதையடுத்து அந்த திருடனை போலீசார் கைது செய்தனர்.
கழிவு நீர் கால்வாய் மூடிகளை திருடி வந்த திருடன் பெரிய தொகையை சம்பாதிக்கும் நோக்கில், இரும்பு பாலத்தையே அக்கு வேறு ஆணிவேராக பிரித்து எடுத்து சென்றதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications