போலி ஆவணம் தயாரித்து நிலங்கள் விற்பனை: அதிமுக பிரமுகருக்கு வலைவீச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலி ஆவணங்கள் தயாரித்து 100 ஏக்கர் நிலத்தை விற்ற புரோக்கரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அதிமுக பிரமுகர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் பனிச் சித்ரஹெம்ப்ரான், ஜேகேஷ் ஹெம்ப்ரான். இவர்களுக்கு சொந்தமான 38 ஏக்கர் நிலம் ஒட்டப்பிடாரம் அருகே கே.தளவாய்புரத்தில் உள்ளது. இதை பாளையங்கோட்டையை சேர்ந்த ரிண்டு என்பவர் நிர்வகித்து வருகிறார்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு நில புரோக்கரான வடக்கு பரம்பூரை சேர்ந்த ரங்கநாத கண்ணன் என்பவரும், ஒட்டப்பிடாரத்தை சேர்ந்த அதிமுக ஊராட்சி செயலாளர் கெம்புமகாராஜா உள்ளிட்ட சிலரும் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து இந்த நிலத்தை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இதுபோல் டெல்லி கர்னல் ரோட்டை சேர்ந்த பிசம்பீர் தயாள் மகன் உபேத் தயாள் என்பவருக்கு சொந்தமான 50.36 ஏக்கர் நிலத்தையும், மேற்கு வங்கத்தை சேர்ந்த தகட்டால்ஹரி என்பவருக்கு சொந்தமான தாளவாயபுரத்தில் உள்ள 10.7 நிலத்தையும் இந்த கும்பல் மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இந்த 3 நிலங்களும் சென்னையில் உள்ள சகாபுதீன் என்பவரது ஷிப்பிங் நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து நிலத்தின் உரிமையாளர்கள் தூத்துக்குடி மாவட்ட நில மோசடி தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நில புரோக்கர் ரெங்கநாத கண்ணனை கைது செய்தனர். கொம்புமகாராஜா உள்ளிட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications