மக்களுக்கான மசோதாக்களை நிறைவேற்றவிடாமல் தடுக்கிறது பாஜக: ராகுல்காந்தி
Subscribe to Oneindia Tamil

ராகுல்காந்தி தமது பிரச்சாரத்தின் போது, உணவுப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிவிட்டால் இனி எப்போதும் ஆட்சிக்கு வர முடியாது என்று பாஜக கருதுகிறது. இதனால்தான் எந்த மசோதாவை கொண்டுவந்தாலும் அதைத் தடுக்கிறது பாரதிய ஜனதா. இதேபோல்தான் நில ஆர்ஜிதம் தொடர்பான மசோதாவும். அந்த மசோதா நிறைவேறிவிட்டால் விவசாயிகளுக்கு நிலத்துக்கு உரிய விலை கிடைக்கும். இதையும் பாஜக தடுக்கிறது என்றார் அவர்.
மேலும் பாஜகவினர் ஊழல் பற்றி பேசுகின்றனர். ஹிமாச்சலப் பிரதேசத்திலோ ஏழைகளின் நிலத்தை பிடுங்கி பணக்காரர்களுக்கு கொடுத்து வருகின்றனர். ஊழல் எந்த துறையில் நடந்தாலும் மத்திய அரசு கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. எங்களது அமைச்சர்கள் பலர் சிறைக்கே போயிருக்கின்றனர் என்றார் ராகுல்காந்தி.












Click it and Unblock the Notifications