சோனியா மருமகன் வத்ராவின் நில டீலிங்கில் முறைகேடு இல்லையாம்: ஹரியானா அரசு சொல்கிறது!
சண்டிகர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் வத்ரா வாங்கிக் குவித்து டி.எல்.எப். நிறுவனத்துக்கு விற்பனை செய்த விவகாரத்தில் எந்த முறைகேடுமே இல்லை என்று ஹரியானா மாநில அரசு அறிவித்திருக்கிறது.
ஹரியானா மாநிலத்தில் ஏழைகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு நிலத்தை பிடுங்கி டி.எல்.எப். கட்டுமான நிறுவனத்துக்கு சோனியா காந்தி மருமகன் வத்ரா விற்பனை செய்தார் என்று சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் புகார் தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்று கூறியதுடன் விசாரணைக்கும் உத்தரவிட்டார் ஹரியானா ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா. ஆனால் அசோக் கெம்காவை உடனே டிரான்ஸ்பர் செய்தது ஹரியானா மாநில அரசு.
அசோக் கெம்காவைத் தொடர்ந்து விஜய்சிங் தாஹியா என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் தமது விசாரணையை நடத்தி முடித்துவிட்டதாகவும் ஆவணங்களின் படி வத்ராவின் நிறுவனம் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். மேலும் நியாயமான விலைக்கே வத்ரா நிறுவனம் விவசாயிகளிடமிருந்து வாங்கியிருப்பதாகவும் விஜய்சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications