கள்ளக்காதல் மனைவியை கூலிப்படை வைத்து எரித்த கணவர் கைது
சேலம்: சேலம் அருகே கள்ளக்காதல் தொடர்பு வைத்திருந்த மனைவியை கூலிப்படை மூலம் எரித்துக் கொன்ற கணவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த கோவில்கோட்டையூரை சேர்ந்த மகாலிங்கத்தின் மனைவி வசந்தி கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார், கடந்த மாதம் 2-ந் தேதி தமது மகளை பார்க்க சென்ற வசந்தி வீடு திரும்பாததால் போலீசில் புகார் செய்யபட்டது.
போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மேட்டூரை சேர்ந்த கோபி என்பவர் போலீசில் சரணடைந்து, வசந்தியை கொலை செய்தது தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், மகாலிங்கம் என் நண்பர். அவரது மனைவி வசந்திக்கும், அதே ஊரைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருந்தது. இதனால் அவரை தீர்த்துக் கட்ட மகாலிங்கம் கூறினார். மகளைப் பார்ப்பதற்காக விடுதிக்கு சென்ற போது வசந்தியை கடத்தி மலை உச்சியில் வைத்து எரித்தோம் என்று கூறியுள்ளார்.
இவர் கொடுத்த தகவலின் பேரில், வசந்தியின் கணவர் மகாலிங்கம், சக்திவேல் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications