டெசோ தீர்மானம் கொடுக்க ஐ.நா. சபைக்கு போகிறார் மு.க. ஸ்டாலின்

இது தொடர்பாக திமுக தலைமையகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றக் தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று காலை முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் ஐ.நா. மன்றத்தில் அளிக்கவுள்ள டெசோ' மாநாட்டுத் தீர்மானங்களையொட்டி தயாரிக்கப்பட்ட வரைவு மனுவினை காட்டி ஒப்புதல் பெற்றனர். அக்டோபர் 30-ந் தேதி மாலையில் இருவரும் அமெரிக்கா புறப்பட இருப்பது பற்றியும் அங்கே உள்ள நிகழ்ச்சிகள் பற்றியும் யார் யாரை சந்திக்க இருக்கிறோம் என்பது பற்றியும் கருணாநிதியிடம் விளக்கி கூறினார்கள்.
ஐ.நா. மன்றத்தில் டெசோ' சார்பாக இந்த மனுவினை அளித்துவிட்டுத் திரும்பும் வழியில் 6-ந் தேதி அன்று லண்டனில் நடைபெறவுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை'' சார்பில் நடை பெறும் உலகத் தமிழ் மாநாட்டிலும் தி.மு.க. சார்பில் கலந்துகொள்ள வேண்டுமென்று கருணாநிதி தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெறும் உலகத் தமிழ் மாநாட்டில் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு ஆகியோருடன் தி.மு.கழகத்தின் சார்பில் அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் இணைந்து கலந்துகொள்கிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications