அமைச்சரவை மாற்றம் எதிரொலி: அம்பிகாசோனி உட்பட மேலும் 3 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்பட இருக்கிறது. இதில் பல அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்பட இருக்கிறது. கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டதால் அவர் நேற்று ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அம்பிகாசோனி, சமூக நீதித் துறை அமைச்சர் முகுல்வாஸ்னிக், சுற்றுலாத்துறை அமைச்சர் சுபோத்காந்த் சஹாய் ஆகியோர் இன்று ராஜினாமா செய்திருக்கின்றனர். பதவி விலகியிருக்கும் அமைச்சர்கள் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட இருக்கின்றனர் என்கிறது காங்கிரஸ் வட்டார தகவல்கள்!












Click it and Unblock the Notifications