கேரளாவில் மரடோனா தங்கிய ஹோட்டல் அறை ‘மியூசியமானது’
திருவனந்தபுரம்: கேரளாவுக்கு அண்மையில் வந்திருந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரரான அர்ஜென்டினாவின் மரடோனா தங்கியிருந்த ஹோட்டல் அறை இப்போது அருங்காட்சியகமாக மாறிவருகிறது.
மரடோனாவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்த அவர் கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மரடோனா, கண்ணூரில் உள்ள ‘புளூ நைல்' 4 நட்சத்திர ஓட்டலில் அறை எண்.399-ல் தங்கி இருந்தார். மரடோனா அறையை காலி செய்த பின்பு அந்த அறையில் தங்கிச் செல்ல கால்பந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கத்தாரைச் சேர்ந்த கால்பந்து ரசிகர் மற்றும் தொழில் அதிபரான ஒருவர் மரடோனா தங்கியிருந்த அறையில் தங்கி இருக்கிறார். அந்த அறையில் மரடோனா தனது காதலியுடன் இருக்கும் புகைப்படம் இருக்கிறது. மரடோனாவின் பேரன் பெஞ்சமின் புகைப்படமும் அங்குதான் இருக்கிறது. இந்த அறையை மரடோனா மியூசியம் என்று பெயரிட்டு பாதுகாக்கப் போவதாகவும் ஹோட்டல் அதிபர் ரவீந்திரன் கூறினார்.












Click it and Unblock the Notifications