விஜயகாந்த், தேமுதிக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை கோரி கமிஷனரிடம் பத்திரிக்கையாளர்கள் புகார்

நேற்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த்திடம் ஜெயா டிவி செய்தியாளர் பாலு, தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து கேட்டபோது அவரை மரியாதைக்குறைவாக பேசி அநாகரீகமாக நடந்து கொண்டார் விஜயகாந்த். மதுரைக்கு வந்து பார் என்றும், அடிக்க கை ஓங்கியும் மோசமாக நடந்து கொண்டார்.
மேலும் செய்தியாளர்களையும் நாயே நாயே என்றும் திட்டினார். இந்த சம்பவத்தால் பத்திரிக்கையாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
பாலுவை தேமுதிகவின் செங்கல்பட்டு எம்.எல்.ஏ. அனகை முருகேசன் கீழே பிடித்துத் தள்ளி விட்டார். இதனால் மேலும் பரபரப்பு கூடியது. இந்த விவகாரம் குறித்து பாலு சார்பில் விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார் அதுகுறித்து ஒப்புகை ரசீதை மட்டும் வழங்கியுள்ளனர். ஆனால் புகாரை இதுவரை பதிவு செய்யவில்லை.
இதையடுத்து இன்று பிரஸ் மீடியா அசோசியேஷன் சார்பில் போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் தரப்பட்டது. அதில், விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் மோதலில் ஈடுபட்ட விஜயகாந்த் மீதும், நிருபர் பாலுவை தாக்கிய அனகை முருகேசன் எம்.எல்.ஏ. மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications