தரூர் மத்திய அமைச்சரானதும் மனைவியின் முதல் 'போணி'.. சில்மிஷ வாலிபருக்கு பளார்!

Subscribe to Oneindia Tamil

Sunanda Pushkar and Shashi Tharoor
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த மத்திய இணை அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கரிடம் வாலிபர் ஒருவர் சில்மிஷம் செய்தார். இதனால் கோபமடைந்த சுனந்தா, அந்த நபரின் கன்னத்தில் பளார் என அறை விட்டார்.

சர்ச்சைக் கருத்துக்கள், கிண்டல், கேலி, நக்கல், ஐபிஎல் ஊழல் என பல்வேறு குழப்பங்களில் சிக்கியதால் பதவியை இழந்த சசி தரூர் தற்போது மீண்டும் இணை அமைச்சராகியுள்ளார். மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராகியுள்ளார் தரூர்.

பதவியை ஏற்ற பின்னர் அமைச்சராக, தனது மனைவி சுனந்தாதவுடன் திங்கட்கிழமை தனது சொந்த ஊரான திருவனந்தபுரத்திற்கு வந்தார். இருவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் சசிதரூருக்கு மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர். அவரது மனைவி சுனந்தா புஷ்கரை சுற்றியும் ஏராளமான தொண்டர்கள் சூழ்ந்திருந்தனர்.

அப்போது ஒரு வாலிபர் சுனந்தா புஷ்கரிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுனந்தாபுஷ்கர் அந்த வாலிபரை பிடித்து கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் சுனந்தாவை பத்திரமாக அனுப்பிவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+