நரேந்திர மோடி - சசிதரூர் மோதல் ஏன்?
டெல்லி: மனைவி அமையும் நேரம் ஒரு சிலருக்கு லக் அடிக்கும் என்பார்கள். ஆனால் மத்திய அமைச்சர் சசிதரூருக்கு மனைவியை வைத்துதான் சர்ச்சையே. தோழியாக இருந்தபோதே அமைச்சர் பதவிக்கு வேட்டு வைத்தவர் சுனந்தா. மனைவியான பின்னரும் அவர் தரூருக்கு சர்ச்சையை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அமைச்சர் பதவிக்கு வேட்டு
காங்கிரஸ் அரசு 2வது முறையாக பதவி ஏற்றபோது சசிதரூருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிக்கான லக் அடித்தது. ஆனால் ஐபிஎல் கொச்சி அணியில் தன்னுடைய தோழி சுனந்தாவுக்கு 70 கோடி மதிப்புள்ள பங்குகளை பெற்றுத்தர தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டினை அடுத்து 2010ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்தார்.

சில மாதங்களில் திருமணம்...
காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனந்தா. ஐ.பி.எல் சர்ச்சைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறிய தரூர் சில மாதங்களில் தனது தோழி சுனந்தாவை திருமணம் செய்தார். இதுவே பெரும் சர்ச்சையை எழுப்பியது.

சுனந்தாவின் மறுபெயர் சர்ச்சையா?
கால ஓட்டத்தில் சசிதரூருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கவே அந்த சந்தோசத்தை கொண்டாட சில தினங்களுக்கு முன்னர் சொந்த ஊரான திருவனந்தபுரம் வந்திருக்கிறார். வந்த இடத்தில் யாரோ சுனந்தாவிடம் சில்மிஷம் செய்த அவரது கன்னத்தில் பளார் விட்டார் சுனந்தா.

ரூ. 50 கோடி காதலி ..மோடியின் கிண்டல்
இப்பொழுது குஜராத், இமாச்சல்பிரதேசத்தில் சட்டமன்றத்தேர்தல் சூடுபிடித்துள்ளது. பிரசாரத்தில் பேசிய மோடி, தரூரின் மனைவியைப் பற்றி கிண்டல் செய்துள்ளார். ரூ.50 கோடி கேர்ள்ப்ரெண்ட் என்று சுனந்தாவைப் பற்றி மோடி கூறவே பற்றிக்கொண்டது சர்ச்சை.

விலைமதிப்பில்லாத பெண்ணாக்கும்..தரூர் பதிலடி
ஆனால் மோடியின் இந்த கிண்டலுக்கு பதிலளித்துள்ள சசிதரூர் என்னுடைய மனைவி ரூ. 50 கோடிக்கும் மேல் மதிப்புடையவர். அவர் ஒரு விலைமதிப்பற்ற பெண் என தெரிவித்துள்ளார்.

காதலித்தால் தெரியும் அருமை...
டிவிட்டரில் மோடியை காட்டமாக விமர்ச்சித்துள்ள சசிதரூர், மோடி காதல் வயப்படவேண்டும். அப்பொழுதுதான் காதலின் அருமை அவருக்குத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார். சசிதரூரின் இந்த பதில், டுவிட்டர் இணையதளத்தில் இருவரின் ஆதரவாளர்களிடையே கருத்து மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ஏன் இந்த கொலை வெறி?
எத்தனையோ அமைச்சர்கள் இருக்கையில் சசிதரூரை மட்டும் மோடி குறிவைத்தது ஏன் என்பதுதான் பலரின் கேள்வி. இதற்கு காரணம் டிவிட்டர்தானாம்.

மோடி – தரூர் டிவிட்டர் போர்
சமீபத்தில் மோடியின் ட்விட்டர் கணக்கில் 10 லட்சம் பேர் அவரை பின் தொடர்வதற்காக மோடி தனக்கு தானே வாழ்த்து சொன்னார். ஆனால் அதில் பெரும்பான்மையானவை போலி கணக்குகள் என்ற தகவல் வெளியானவுடன் சசி தரூர் தன் ட்விட்டர் கணக்கில் மோடியை கிண்டல் செய்திருந்தார். அதற்குத்தான் இந்த பதிலடியாம்.












Click it and Unblock the Notifications