நிலம் புயலை சந்திக்க தமிழ்நாடு தயார்... 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிலம் புயல் இன்று பிற்பகலுக்கு மேல் சென்னை - நெல்லூர் இடையே கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சென்னையையும் குறி வைக்கக் கூடும் என்ற அச்சமும் உள்ளது.
இந்த புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் விட்டு விட்டு கன மழை பெய்து வருகிறது.
இதையடுத்து புயல் காரணமாகவும், பலத்த மழை காரணமாகவும் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் 22 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டனம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, சேலம், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புதுவையிலும் விடுமுறை
இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புயல் மற்றும் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளைச் சந்திக்க அனைத்து மாவட்ட நிர்வாகமும் ஆயத்த நிலையி்ல் வைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் விடுமுறை அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications