ஸ்பெக்ட்ரம்: தயாநிதி மாறன் தொடர்புடைய வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வழக்கு என்ன?
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை கோரி ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அப்போது மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்தார் என்று கூறப்பட்டது. பின்னர் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதும் ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை தயாநிதி மாறன் ஒதுக்கீடு செய்தார் என்றும் புகார் சொல்லப்பட்டது. ஏர்செல் நிறுவனத்தை தமது அமைச்சர் பதவியை வைத்து மிரட்டி மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்தார் என்றும் இதன் பிரதிபலான தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமத்தில் பெருமளவு பணத்தை மேக்சிஸ் நிறுவனம் முறைகேடு செய்தது என்பதும் சுப்பிரமணிய சாமி, பிரசாந்த் பூஷன் ஆகியோரது வழக்கு
உச்சநீதிமன்றத்தில்...
ஆனால் தயாநிதி மாறன் தொடர்புடைய இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது என்பது வழக்கு தொடர்ந்தவர்களின் குற்றச்சாட்டு. இன்று இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சுப்பிரமணியசாமியும் பிரசாந்த் பூஷனும் நேரில் ஆஜராகினர். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் இதில் தேவையான சட்ட நடவடிக்கைகளை சிபிஐ விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஏர்செல்- மேக்சிஸ் வழக்கின் விசாரணை வரும் 7-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது,












Click it and Unblock the Notifications