பரமக்குடி கலவரம்: 2 கிராமத்தைச் சேர்ந்த 250 பேர் மீது வழக்கு
பரமக்குடி: பரமக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 250 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவுக்கு சென்றபோது பரமக்குடி அருகே உள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தில் சிலர் கற்களால் தாக்கியதில் டி.வேலங்குடியைச் சேர்ந்த சிவக்குமார்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே போல் திருப்புவனம் அல்லிநகரத்தைச் சேர்ந்த மலைக்கண்ணன்(23), கீழராங்கியத்தைச் சேர்ந்த வீரமணி(22) ஆகியோர் பொன்னையாபுரம் பகுதியில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதில் பலியாகினர். இதைத் தொடர்ந்து பரமக்குடி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பேருந்துகள் ஓடவில்லை, கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 3 பேர் படுகொலை தொடர்பாக பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சேர்ந்த 100 பேர் மீதும், பொன்னையாபுரத்தைச் சேர்ந்த 150 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக பாம்புவிழுந்தானைச் சேர்ந்த பழனிமுருகன்(28), பாண்டி(45), சிங்கதுரை(32), மோகன்(42), பொன்னையாபுரம் பாலன்நகர் பகுதியைச் சேர்ந்த கதிர்காமன்(23), மலைராஜ்(55), மூர்த்தி(40), பெரியசாமி(39), பாண்டி(20), பழனி(35), குருசாமி(50) ஆகிய 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்பு, அவர்கள் பரமக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே பதட்டத்தை தணிக்க பரமக்குடி முழுவதும் கலவரத் தடுப்பு போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications