நாய்களைக் காப்பாற்றுங்கள்... வெள்ளத்தில் சிக்கிய பெண்ணின் போராட்டம்
வேலூர்: வேலூர் அருகே ஆற்று வெள்ளம் சூழ்ந்த போதும் தான் வளர்த்த மூன்று நாய்களை காப்பாற்ற பெண் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா முக்கோட்டி மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். ஓய்வுபெற்ற போலீஸ்காரரான இவர் தனது மனைவி லதா உடன் அங்குள்ள ஆற்றங்கரையோரம் வீடுகட்டி வசித்து வருகிறார். இவர்களின் வீடு தனியாக இருப்பதால் காவலுக்காக வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வருகின்றனர். பெற்ற பிள்ளைகளைப் போல அந்த நாய்கள் மீது லதா பாசம் வைத்திருப்பாராம்.
கடந்த இருதினங்களுக்கு முன் புயல் காரணமாக மழை பெய்து அகரம் ஆற்றில் ஏற்பட்ட உடைப்பால் கோவிந்தராஜின் வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. வெள்ளம் சூழ்வதைக் கண்ட கோவிந்தராஜ் அங்கிருந்து தப்பினார். ஆனால் அவரது மனைவி லதா மற்றும் நாய்களால் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை.
இதனையடுத்து வெள்ளம் சூழ்ந்த வீட்டில் சிக்கிய பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டிற்குள் பாம்பு ஒன்று இருந்ததால் லதாவை மட்டும் மீட்க முடிவு செய்தனர் தீயணைப்பு வீரர்கள். ஆனால் தனது மூன்று நாய்களையும் தன்னுடன் மீட்டால் மட்டுமே தானும் வருவேன் என்று லதா கூறிவிட்டார். இதையடுத்து மேலும் சில வீரர்கள் அந்த வீடு இருக்கும் பகுதிக்குச் சென்றனர். அவர்கள் முதலில் வீட்டிலிருந்த விஷ பாம்பை அடித்துக்கொன்றுவிட்டு லதாவையும், அவரது மூன்று நாய்களையும் மீட்டனர்.
தங்களுக்கு காவலாக இருந்த செல்லப்பிராணிகளுக்காக உயிரை பணயம் வைத்து போராடிய பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications