For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னைக்கு மேலும் 2 கூடுதல் கமிஷனர்கள்-19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சட்ட ஒழுங்கு பிரிவிற்கு 2 கூடுதல் கமிஷனர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பல்வேறு இடங்களுக்கு பணி மாற்றம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ஆர்.ராஜகோபால் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,

சென்னை மாநகர போலீஸ் கூடுதல் கமிஷனர் பி.தாமரைக்கண்ணன், (புதிதாக உருவாக்கப்பட்டுள்ள) வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மேற்கு இணை கமிஷனர் கே.சங்கர், வடசென்னை இணை கமிஷனராகவும், பயிற்சிக்கு சென்று இருந்த இணை கமிஷனர் ஆர்.எஸ்.நல்லசிவம், சென்னை மாநகர போலீஸ் தலைமையக இணை கமிஷனராகவும், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. கே.சண்முகவேல், மேற்கு சென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், வடசென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனர் என்.கே.செந்தாமரைகண்ணன், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் சரகம் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) டி.ஐ.ஜி. ஆர்.திருஞானம், தென்சென்னை சட்டம் ஒழுங்கு இணை கமிஷனராகவும், தென்சென்னை இணை கமிஷனர் கே.பி.சண்முகராஜேஸ்வரன், திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி.யாகவும், சென்னை மாநகர போலீஸ் தலைமையக இணை கமிஷனர் கே.என்.சத்தியமூர்த்தி, காஞ்சிபுரம் சரக (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) டி.ஐ.ஜி.யாகவும், ரயில்வே போலீஸ் டி.ஐ.ஜி. டாக்டர் ஆர்.தினகரன், தென்சென்னை போக்குவரத்து பிரிவு இணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை தி.நகர் துணை கமிஷனர் ஆர்.சிவகுமார், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராகவும், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.சரவணன், பரங்கிமலை துணை கமிஷனராகவும், பரங்கிமலை துணை கமிஷனர் ஏ.சரவணன், சென்னை மாநகர போலீஸ் நிர்வாகப்பிரிவு துணை கமிஷனராகவும், தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஏ.கே.கிரி, திருவல்லிக்கேணி துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.ஜெயசந்திரன், மைலாப்பூர் துணை கமிஷனராகவும், மைலாப்பூர் துணை கமிஷனர் டி.கே.புகழேந்தி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.பகலவன், தி.நகர் துணை கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஏ.ராதிகா, திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பூக்கடை துணை கமிஷனர் டி.எஸ்.அன்பு, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாகவும், வடசென்னை போக்குவரத்து துணை கமிஷனர் நிர்மல்குமார் ஜோஷி, பூக்கடை துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
TN government has formed 2 new commissioner post and 19 IPS officers were transferred from their respective posts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X