For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கிரானைட் முறைகேடு வழக்கு: அழகிரி மகனை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

By Siva
Google Oneindia Tamil News

Durai Dayanidhi
மதுரை: கிரானைட் குவாரி முறைகேட்டு வழக்கில் தேடப்பட்டு வரும் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மதுரை உயர் நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் பங்குதாரராக இருந்தவரும், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கிடையே அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசாரும் அவரைப் பிடிக்க புதுப் புது முறைகளைக் கையாண்டும் அவர் இன்னும் சிக்கியபாடில்லை. இந்நிலையில் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி துரை தயாநிதி சார்பில் சென்னை உயர் நீதி்மன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக துரையை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை வரும் 21ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

English summary
Madurai HC has extended the ban to arrest central minister MK Azhagiri's son Durai Dayanidhi in granite scam till 21st of this month.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X