கிரானைட் முறைகேடு வழக்கு: அழகிரி மகனை கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil

மதுரை மாவட்டம் மேலூரில் நடந்த கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் பங்குதாரராக இருந்தவரும், மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கிடையே அவர் தலைமறைவாகிவிட்டார். போலீசாரும் அவரைப் பிடிக்க புதுப் புது முறைகளைக் கையாண்டும் அவர் இன்னும் சிக்கியபாடில்லை. இந்நிலையில் பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரி துரை தயாநிதி சார்பில் சென்னை உயர் நீதி்மன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக துரையை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடையை வரும் 21ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications