காவிரியில் 50 டி.எம்.சி. நீரைக் கேட்டு தமிழக அரசு கண்காணிப்புக் குழுவிடம் புதிய மனு
சென்னை: தமிழகத்தில் சம்பா சாகுபடிக்காக 50 டிஎம்சி நீரை கர்நாடகம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தமிழக அரசு புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், கண்காணிப்புக் குழு பிறப்பித்த உத்தரவுப்படி உரிய நீரை கர்நாடகம் திறந்து விடவில்லை. நிலம் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. சம்பா சாகுபடி செய்யப்பட்டடிருக்கும் உள் மாவட்டங்களில் மழை போதிய அளவு பெய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் அண்மைய மழையால் மேட்டூர் அணையும் நிரம்பவில்லை. இதனால் தமிழகத்துக்கு 50 டி.எம்.சி. நீரை கர்நாடக திறக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 15 ந் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் மனு குறித்து விவாதம் நடைபெறும்.