Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்மயி விவகாரம்: அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு… பேராசிரியருக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சின்மயி பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக எழுந்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் ஆன அரசு ஊழியர் வீட்டில் அவினாசி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் கைதான நிப்ட் கல்லூரி பேராசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.

டிவிட்டர், பேஸ்புக் வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக பாடகி சின்மயி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த வாரம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரின் சென்னை சைபர் கிரைம் போலீசார், அவிநாசியைச் சேர்ந்த ராஜன் என்கிற ராதாமணாளன் என்பவரை கைது செய்தனர். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் இருக்கும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், 1ம் தேதி அவிநாசி, கைகாட்டிப்புதூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்ட போலீசார், லேப்டாப், சி.டி.க்கள், இணைய தள இணைப்புக்கான மோடம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உதவிப் பேராசிரியருக்கு ஜாமீன்

இதே புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னை, "நிப்ட்' கல்லூரியின் இணை பேராசிரியர், சரவணகுமார் பெருமாள் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமின் கோரி, எழும்பூர் கோர்ட்டில், சரவணகுமார், மனுத் தாக்கல் செய்தார். மனுவை, விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நசிர் அகமது, சரவணகுமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+