சின்மயி விவகாரம்: அரசு ஊழியர் வீட்டில் ரெய்டு… பேராசிரியருக்கு ஜாமீன்
சென்னை: பாடகி சின்மயி பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக எழுந்த புகாரின் பேரில் சஸ்பெண்ட் ஆன அரசு ஊழியர் வீட்டில் அவினாசி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேசமயம் கைதான நிப்ட் கல்லூரி பேராசிரியருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளது.
டிவிட்டர், பேஸ்புக் வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக பாடகி சின்மயி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த வாரம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரின் சென்னை சைபர் கிரைம் போலீசார், அவிநாசியைச் சேர்ந்த ராஜன் என்கிற ராதாமணாளன் என்பவரை கைது செய்தனர். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் இருக்கும் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், 1ம் தேதி அவிநாசி, கைகாட்டிப்புதூரில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்ட போலீசார், லேப்டாப், சி.டி.க்கள், இணைய தள இணைப்புக்கான மோடம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உதவிப் பேராசிரியருக்கு ஜாமீன்
இதே புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சென்னை, "நிப்ட்' கல்லூரியின் இணை பேராசிரியர், சரவணகுமார் பெருமாள் கடந்த சில தினங்களுக்கு முன் ஜாமின் கோரி, எழும்பூர் கோர்ட்டில், சரவணகுமார், மனுத் தாக்கல் செய்தார். மனுவை, விசாரித்த தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நசிர் அகமது, சரவணகுமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, உத்தரவிட்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications