முல்லைப் பெரியாறு அணை வழக்கு.. பிப். 19ம் தேதி இறுதி விசாரணை

முல்லைப் பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை சரியில்லை, அணை பலவீனமாக உள்ளது, உடைந்தால் பேராபத்து என்று கேரள அரசு பிரச்சினை கிளப்பியது. இதையடுத்து அதை மறுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டது. இந்தக் குழு முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியது. ஆய்வறிக்கையும் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் அணை நல்ல பலத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இறுதிக் கட்ட விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி நடைபெரும் என்றும், ஜனவரி 28ம் தேதி இடைக்கால உத்தரவகுள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் ஆனந்த் குழுவின் அறிக்கை நகல்களை கேரள அரசு, தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வழக்கு தொடர்பான ஆவணங்களை இரு மாநில அரசுகளும் பரிசீலனை செய்து, அதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அது குறித்து ஜனவரி 28ம் தேதி உச்ச நீதிமன்றத்தை அணுகி விளக்கம் கோரலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் நலப் பணியாளர் நீக்க விவகாரம்
இதற்கிடையே, மக்கள் நலப்பணியாளர் நீக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மக்கள் நலப்பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் தொடர்ந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்றும், இந்த வழக்கு குறித்து 4 வார காலத்துக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications