கோ ஆப்டெக்ஸில் அமைச்சர் ஆய்வு... மயங்கி விழுந்து உயிரிழந்த பெண் ஊழியர்!
Subscribe to Oneindia Tamil

இன்று காலை சென்னிமலை கோ ஆப்டெக்ஸ் கொடவுனுக்குச் சென்ற அமைச்சர் சுந்தரராஜ் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த பெண் உதவி மேலாளரிடம் சரமாரியாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகே நின்றிருந்த ஊழியர் கோதைநாயகி திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார்.
உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், கோதைநாயகி இறந்து போய் விட்டதாக தெரிவித்தனர். மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கோதைநாயகியிடம் அமைச்சர் கடுமையான கேள்விகள் கேட்டாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications