முதல்வர் இல்லாமல் நாம் இல்லை... தேமுதிக சுந்தரராஜன்
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் சுந்தரராஜன் தலைமையில் நான்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர். இதனால் தேமுதிக வட்டாரம் கலகலத்துப் போய்க் கிடக்கிறது.
இந்தநிலையில் மதுரையில் நடந்த தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் தொகை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் சுந்தரராஜன். அப்போது அவர் பேசுகையில்,
தொகுதி மக்களின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காக முதல்வரை சந்தித்தேன். இதை குற்றமாகக் கருதி, என்னை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துள்ளனர். முதல்வர் இல்லாமல் நாம் இல்லை என்பதை வெகு விரைவில் தேமுதிகவினர் புரிந்து கொள்வார்கள். வீழ்வது நானாக இருப்பினும், வாழ்வது பொது மக்களாக இருக்க வேண்டும் என்றார் சுந்தரராஜன்.












Click it and Unblock the Notifications