சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல்

போராளிகளும், ராணுவத்தினரும் துப்பாக்கிச் சண்டையிலும் ஏவுகணைகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் சில ஏவுகணைகள் இலக்கு தவறி அண்டை நாடான இஸ்ரேலுக்குள்ளும் இன்னொரு அண்டை நாடான துருக்கி பகுதிக்குள்ளும் விழுந்து வருகின்றன.
இந் நிலையில் நேற்று சிரியா மீது இரண்டாவது இஸ்ரேல், முதன்முறையாக பதிலுக்கு ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. 4 நாட்களுக்கு முன்னரும் இதே போன்ற ஒரு தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது.
1967ம் ஆண்டு சிரியாவுடன் போரிட்ட இஸ்ரேல், சிரியாவிடமிருந்து கோலன் ஹைட்ஸ் என்ற பகுதியை கைப்பற்றி, தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதிக்குள் தான் சிரியாவிலிருந்து பாய்ந்த ஏவுகணை சில நாட்களுக்கு முன் வந்து விழுந்தது.
இதற்கு பதிலடியாகவும், சிரியாவை எச்சரிக்கும் வகையிலும் சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 4ம் தேதி துருக்கியின் எல்லைக்குள் சிரிய நாட்டுப் படையினரின் பீரங்கு குண்டுகள் வந்து விழுந்து 5 பேர் பலியானதையடுத்து சிரியாவுக்குள் துருக்கி படைகள் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதும், அதில் ஏராளமான சிரியா நாட்டு வீரர்கள் பலியாகியானதும் குறிப்பிடத்தக்கது.
துனீசியாவில் துவங்கிய ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து எகிப்து, லிபியாவிலும் இப்போது சிரியாவிலும் நடந்து வருகின்றன.
மேலும் பஹ்ரைனிலும் இதே போன்ற போராட்டங்கள் துவங்கின. அங்கு பெரும்பான்மையாக உள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஆட்சியில் உள்ள சன்னி பிரிவினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். ஆனால், இதை அமெரிக்க உதவியோடும் செளதி அரசின் உதவியோடும் பஹ்ரைன் ஆட்சியாளர்கள் முறியடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications