அவதூறு வழக்கு: யாஹூ ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுத்தவருக்கு கூகுளும் ரூ.1 கோடி தர உத்தரவு
சிட்னி: ஆஸ்திரேலியர் ஒருவரை வன்முறைக் கும்பலுடன் சேர்ந்தவர் என்று அவதூறு பரப்பியதற்காக அவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிலோரட் ட்ரிகுல்ஜா(62) என்பவர் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த 2004ம் ஆண்டு அவரை யாரோ பின்பக்கமாக துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து மெல்போர்ன் நகரில் பெரிய குற்றங்களில் ஈடுபடுபவர் மிலோரட் என்று கூகுள் செய்தி வெளியிட்டது.
கூகுளில் அவரது பெயரைத் தேடினால் அவருக்கும் ரவுடிகள் தலைவன் டோனி மோக்பெல் மற்றும் ரவுடி கும்பல்களுக்கும் தொடர்புள்ளது என்ற செய்தி வந்தது. இதையடுத்து மிலோரட் விக்டோரியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் கூகுள் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டேவிட் பீச் மிலோரட் பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்காக அவருக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.
முன்னதாக தன்னைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதாக மிலோரட் யாஹூ நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் அவருக்கு யாஹூ நிறுவனம் ரூ.12,918,071 நஷ்ட ஈடாக வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications