வெள்ளிக் கொலுசுக்காக 70 வயது மூதாட்டியைக் கொன்று கால்களை வெட்டிய மர்ம நபர்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வெள்ளிக் கொலுசுக்காக 70 வயது மூதாட்டியைக் கொன்று அவரது கால்களை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. அவற்றின் விலை ஏறுமுகமாகவே இருப்பதால் செயின் பறிப்பு, நகைக்காக கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக் கொலுசுக்காக மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தில் உள்ளது மஹுவா கிராமம். அங்குள்ள ஷிவ் காலனியைச் சேர்ந்தவர் நாராயணி தேவி(70). அவரது மகன்கள் வேறு ஒரு கிராமத்தில் இருப்பதால் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் காலில் கிடந்த வெள்ளிக் கொலுசுகளுக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்தனர்.
பின்னர் நாராயணி தேவியின் கால்களை வெட்டி எடு்த்து அதில் கிடந்த கொலுசுகளை திருடிச் சென்றுள்ளனர். கொலுசுக்காக மூதாட்டி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications