பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த தொலைத் தொடர்புத்துறையை கொன்று விட்டது சிஏஜி: கபில் சிபல்

இன்று டெல்லியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், கபில் சிபல், ஒலிபரப்புத்துறை இணைமைச்சர் மணிஷ் திவாரி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கபில் சிபல் கூறுகையில்,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் அரசு எதிர்பார்த்த வருவாய் ஈட்ட முடியாமல், ஏலம் தோல்வியில் முடிந்துள்ளது. இப்படி ஆகும் என்று நான் ஏற்கெனவே கூறினேன். இந்தத் தோல்வி மத்திய தணிக்கைத்துறை அதிகாரியான சி.ஏ.ஜியின் முடிவால் ஏற்பட்டது.
எதை வைத்துக் கொண்டு கடந்த 2008ம் ஆண்டு, 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் விற்றிருந்தால் ரூ.1.76 லட்சம் கோடி லாபம் கிடைத்திருக்கும் என்று சி.ஏ.ஜி கூறினார் என்பது தெரியவில்லை.
கொள்கை முடிவுகள் எடுக்கும் பணியை அரசிடம் விட்டுவிட வேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் மட்டுமே தலையிட வேண்டும். 2ஜி குறித்து செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டதால், தொலைத் தொடர்புத் துறைக்கு சரிவுதான் ஏற்பட்டுள்ளது.
பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த இந்தத் துறை சிதைந்துபோய் விட்டது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படிதான் 2ஜி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் மிகக் குறைந்த வருவாயாக ரூ.9,407 கோடி கிடைத்ததற்கு சி.ஏ.ஜியே காரணம்.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை இழப்பீடு குறித்து தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டது இப்போது தெளிவாகிவிட்டது. இதனால் 2ஜி விவகாரத்தில் சி.ஏ.ஜி. மதிப்பீடு செய்து வெளியிட்ட அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இப்போது விலை போகாத மண்டலங்களில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் வரும் ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்தப்படும் என்றார்.
நாங்கள் கொண்டவில்லை..
மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், 2ஜி முறைகேட்டால் ரூ.1.76 லேட்சம் கோடி இழப்பு என்று கூறுவது தவறான கருத்து. 2ஜி ஏலம் தோல்வியை நாங்கள் கொண்டாடவில்லை என்றார்.
மேலும் சர்வதேச பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை சரிசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டுக்குள் சரிசெய்வோம். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டம் சரியாக நடைபெறவில்லை. குளிர்கால கூட்டத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேணடும். சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எந்த விதியின் கீழ் விவாதிப்பது என்று தெரியவில்லை என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications