பால்தாக்கரே உடல்நிலையில் முன்னேற்றம்- இயல்புக்கு திரும்பும் மும்பை
Subscribe to Oneindia Tamil

பால்தாக்கரேயின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. இதனால் அரசியல்வாதிகள், திரையுலக பிரமுகர்கள் பலரும் தாக்கரேவின் நலம் விசாரிக்க அவரது வீட்டுக்கு படையெடுத்தனர். தாக்கரேயின் உடல்நிலை மோசமடைந்த தகவலைத் தொடர்ந்து அவரது வீட்டு முன்பு பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் குவிக்கப்பட்டனர். மும்பை மாநகரத்தின் வழக்கமான இயல்பு வாழ்க்கை நேற்று முடங்கிப் போயிருந்தது. அனைத்து கடைகளும் மூடப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பால்தாக்கரேவின் மகனும் சிவசேனையின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் பால்தாக்கரே உடல்நிலை தேறிவருவதாக கூறியுள்ளனர். இந்தத் தகவல் நேற்று இரவு முதல் தொடர்ந்து கூறப்பட்டு வருவதால் இன்று வழக்கமான பரபரப்பான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது மும்பை மாநகரம்.












Click it and Unblock the Notifications