For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தர்மபுரி காதல் திருமண கலவர வழக்கு: சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தர்மபுரி: தர்மபுரி அருகே தலித் குடியிருப்புகளுக்கு தீவைக்கப்பட்ட கலவர வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி அருகே உள்ள நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் இருவேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் கடந்த 07.11.2012 அன்று 300க்கும் மேற்பட்ட தலித் குடியிருப்புகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 50க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கும் தீவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் 92 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

English summary
TamilNadu government today ordered Dharmapuri riot case handed over to CBCID
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X