போர்க் குற்ற தண்டனையிலிருந்து குரேஷிய ராணுவ தளபதிகள் விடுதலை
திஹேஹ்: யூகோஸ்லாவியாவில் செர்பியர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றச் சாட்டில் சிக்கிய குரேஷியாவின் அண்டே கொடோவினா மற்றும் மர்காக் ஆகிய ராணுவ தளபதிகளை சர்வதேச நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.
1995-ம் ஆண்டு செர்பியர்களை இனப்படுகொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம் இருவருக்கும் தண்டனை விதித்திருந்தது. கொடோவினாவுக்கு 24 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மர்காக்குக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.
இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை என்று கூறி இருவரையும் விடுதலை செய்திருக்கிறது.
இருவரும் விடுதலை செய்யப்பட்ட செய்தியை குரேஷியர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். ஆனால் செர்பியாவோ இது ஒரு அரசியல் ரீதியான முடிவு என்று கூறியதுடன் ஆறிய காயத்தை கீறிய செயல் என்று விமர்சனம் செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications