உடல்நலக்குறைவு: முன்னாள் அமைச்சர் வீரபாண்டியார் மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil

சேலம் அங்கம்மாள் காலனி குடிசைக்கு தீ வைத்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு அவர் சேலம் அருகே பூலாவாரியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
மேலும் கட்சி கூட்டங்களில் பங்கேற்றும், தொண்டர்களை சந்தித்து கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியும் வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்ற அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. சளித் தொல்லையால் அவதிப்பட்ட அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது குணமாகி வருகிறார்.












Click it and Unblock the Notifications