பீகாரில் சிவன் கோவில் கட்ட இந்துக்களுக்கு உதவும் முஸ்லிம்கள்
பாட்னா: பீகார் மாநிலத்தில் சிவன் ஆலயம் கட்ட அங்குள்ள முஸ்லிம் சமூகத்தினர் உதவி செய்து வருகின்றனர்.
பீகார் மாநிலம் சீதாமார்ஹி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சிவன் ஆலயம் கட்ட அங்குள்ள முஸ்லிம் மக்கள் உதவி செய்து வருகின்றனர்.
இது குறித்து சிவன் கோவில் கட்டுமான கமிட்டியின் தலைவரும், பள்ளி ஆசிரியருமான ராஜ்கிஷோர் ரௌத் கூறுகையில்,
கோவில் கட்ட முஸ்லிம்கள் பணம் மட்டும் கொடுக்கவில்லை. மாறாக கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையவும் பெரிதும் உதவுகின்றனர். இந்த கோவில் கட்டுமானம் இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு ஒரு உதாரணம் என்றார்.
முன்னதாக கடந்த ரமலான் மாதத்தின்போது பீகாரில் உள்ள பகல்பூரில் ஜெயின் கோவில் கட்ட நோன்பு வைத்திருந்த முஸ்லிம்கள் உதவி செய்துள்ளனர். கோவில் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் செல்ல வசதியாக தனது வீட்டின் ஒரு பகுதியையே இடித்துள்ளார் பகல்பூரைச் சேர்ந்த முகமது ஜானேஷர் அக்தர் என்பவர்.
மேலும் இந்த ஆண்டு துவக்கத்தில் கயா மாவட்டத்தில் துர்கா மாதா கோவிலைக் கட்ட சில முஸ்லிம்கள் உதவியுள்ளனர். அவர்கள் பண உதவி செய்ததோடு கட்டுமானப் பணிகளிலும் பங்கேற்றுள்ளனர்.
இது தவிர முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பச்வாரா கிராமத்தைச் சேர்ந்த முகமது பக்ரூல் இஸ்லாம் என்பவர் சிவன் ஆலயம் கட்ட தனது நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications