பால்தாக்கரே இறுதி ஊர்வலத்தில் பாதியில் வீட்டுக்குப் போன ராஜ் தாக்கரே

ராஜ்தாக்கரே.... சிவசேனாவிலிருந்து 2005-ம் ஆண்டு வெளியேறி மகராஷ்டிரா நவநிர்மான் சேனாவை உருவாக்கினார். பால்தாக்கரேவை பகைத்துக் கொண்டு தனிக்கட்சி தொடங்க ஒரே காரணம், தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டதுதான்!
இந்நிலையில் பால்தாக்கரே மறைகிறார்... தாக்கரேவின் மறைவுக்குப் பிறகாவது இரண்டு கட்சிகளும் ஒன்றிணையுமா? என்ற விவாதம் எழுந்த நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை என்கிற வகையிலேயே ராஜ்தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த வாரம் பால்தாக்கரேவின் உடல்நிலை குன்றியிருந்தபோது அவரைப் பார்க்க வந்திருக்கிறார் ராஜ்தாக்கரே. ஆனால் சிறிது நேரத்திலேயே பால்தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்திலிருந்து வெளியே வந்து தமது காரில் அமர்ந்து கொண்டார். சுமார் 2 மணி நேரம் ராஜ்தாக்கரே காரிலேயே அமர்ந்திருந்தார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதைத் தொடர்ந்தேதான் நேற்று காலை பால்தாக்கரே உடல் அவர்து வீட்டில் இருந்து வெளியே எடுத்து வருவதற்கு முன்பாகவே மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து ராஜ்தாக்கரே வெளியே வந்துவிட்டார். உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர்தான் பால்தாக்கரே உடலை வெளியே எடுத்து வந்து டிரக் வண்டியில் ஏற்றினர்.
பால்தாக்கரே உடல் வைக்கப்பட்ட டிரக்கில் ராஜ்தாக்கரே ஏறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. தாக்கரே குடும்பமே டிரக்கில் ஏறியிருக்க ராஜ்தாக்கரே மட்டும் வாகனத்துக்கு முன்னாள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். பிற்பகல் வாக்கில் திடீரென ராஜ்தாக்கரேவை இறுதி ஊர்வலத்தில் காண முடியவில்லை. வீட்டுக்குப் போய்விட்ட ராஜ்தாக்கரே டிவி மூலமாக இறுதி ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவி ஷர்மிளா. உத்தவ்தாக்கரேவின் மனைவி ராஷ்மியுடனே இருந்தார். பின்னர் மாலையில் சிவாஜிபூங்காவில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் அவர் கலந்து கொண்டார். அங்கு கண்ணீரெல்லாம் சிந்தினார்...
இதைப்பற்றியெல்லாம் சிவசேனா தொண்டர்கள் கவலைப்படுவதாக இல்லை... 'ராஜ்தாக்கரேவால் பால்தாக்கரேவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரால் மிகவும் காயம்பட்டவர் பால்தாக்கரே." என்று விமர்சனத்தோடுதான் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் ராஜ்தாக்கரே சிவசேனாவுடன் இணைவது என்பது பெருங்கேள்வியாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications