பால்தாக்கரே இறுதி ஊர்வலத்தில் பாதியில் வீட்டுக்குப் போன ராஜ் தாக்கரே

ராஜ்தாக்கரே.... சிவசேனாவிலிருந்து 2005-ம் ஆண்டு வெளியேறி மகராஷ்டிரா நவநிர்மான் சேனாவை உருவாக்கினார். பால்தாக்கரேவை பகைத்துக் கொண்டு தனிக்கட்சி தொடங்க ஒரே காரணம், தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே, கட்சியில் முன்னிலைப்படுத்தப்பட்டதுதான்!
இந்நிலையில் பால்தாக்கரே மறைகிறார்... தாக்கரேவின் மறைவுக்குப் பிறகாவது இரண்டு கட்சிகளும் ஒன்றிணையுமா? என்ற விவாதம் எழுந்த நிலையில் அதற்கான சாத்தியம் இல்லை என்கிற வகையிலேயே ராஜ்தாக்கரேவின் செயல்பாடுகள் இருந்தன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
கடந்த வாரம் பால்தாக்கரேவின் உடல்நிலை குன்றியிருந்தபோது அவரைப் பார்க்க வந்திருக்கிறார் ராஜ்தாக்கரே. ஆனால் சிறிது நேரத்திலேயே பால்தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லத்திலிருந்து வெளியே வந்து தமது காரில் அமர்ந்து கொண்டார். சுமார் 2 மணி நேரம் ராஜ்தாக்கரே காரிலேயே அமர்ந்திருந்தார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதைத் தொடர்ந்தேதான் நேற்று காலை பால்தாக்கரே உடல் அவர்து வீட்டில் இருந்து வெளியே எடுத்து வருவதற்கு முன்பாகவே மாதோஸ்ரீ இல்லத்தில் இருந்து ராஜ்தாக்கரே வெளியே வந்துவிட்டார். உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர்தான் பால்தாக்கரே உடலை வெளியே எடுத்து வந்து டிரக் வண்டியில் ஏற்றினர்.
பால்தாக்கரே உடல் வைக்கப்பட்ட டிரக்கில் ராஜ்தாக்கரே ஏறக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. தாக்கரே குடும்பமே டிரக்கில் ஏறியிருக்க ராஜ்தாக்கரே மட்டும் வாகனத்துக்கு முன்னாள் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். பிற்பகல் வாக்கில் திடீரென ராஜ்தாக்கரேவை இறுதி ஊர்வலத்தில் காண முடியவில்லை. வீட்டுக்குப் போய்விட்ட ராஜ்தாக்கரே டிவி மூலமாக இறுதி ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரது மனைவி ஷர்மிளா. உத்தவ்தாக்கரேவின் மனைவி ராஷ்மியுடனே இருந்தார். பின்னர் மாலையில் சிவாஜிபூங்காவில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளில் அவர் கலந்து கொண்டார். அங்கு கண்ணீரெல்லாம் சிந்தினார்...
இதைப்பற்றியெல்லாம் சிவசேனா தொண்டர்கள் கவலைப்படுவதாக இல்லை... 'ராஜ்தாக்கரேவால் பால்தாக்கரேவின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரால் மிகவும் காயம்பட்டவர் பால்தாக்கரே." என்று விமர்சனத்தோடுதான் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மீண்டும் ராஜ்தாக்கரே சிவசேனாவுடன் இணைவது என்பது பெருங்கேள்வியாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications