தென் மாவட்டங்களில் இன்று மழைய பெய்யும்: சொல்கிறார் எஸ்.ஆர். ரமணன்
சென்னை: வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருப்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 4 நாட்களாக மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் குளிர் அதிகமாகி இருப்பதுடன் பனிப்பொழிவும் உள்ளது. இதனால் மழை பெய்யாதோ என்று மக்கள் பயத்தில் உள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் உருவான புயல் தற்போது வலுவிழந்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய மண்டல இயக்குனர் எஸ்.ஆர். ரமணன் கூறுகையில்,
வங்கக் கடலில் மேற்கு மத்திய பகுதியில் உருவான புயல் அங்கிருந்து தென்மேற்கு திசை நோக்கி நகர்ந்து வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையில் இருந்து 700 கிமீ தொலைவில் கிழக்கே வடகிழக்கில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது. இது மேலும் தென்மேற்கு திசை நோக்கி நகரும் என்பதால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வட மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றார்.












Click it and Unblock the Notifications