தர்மபுரி கலவரம்: விசாரிக்க திமுக குழு அமைப்பு
சென்னை: தர்மபுரியில் தீவைப்பு சம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திமுக குழு உறுப்பினர்கள் இரண்டு தினங்கள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தருமபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் என்ற ஊரில் நடைபெற்ற ஜாதிக் கலவரம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளித்திட திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாண சுந்தரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் உறுப்பினர்களாக கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் டி.செங்குட்டுவன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.தாமரைச்செல்வன், மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் இ.ஜி.சுகவனம், மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் மா.உமாபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழு உறுப்பினர்கள் நவம்பர் 21, 22-ம் தேதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications