2012ல் 119 பத்திரிக்கையாளர்கள் படுகொலை: சிரியா ஆபத்தான நாடு
வியன்னா: 2012ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆண்டு 119 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.பி.ஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது அதிகபட்சமாக சிரியாவில் மட்டும் 36 பேர்வரை பலியாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தும் நாடு சிரியா
வியன்னாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இன்டர்நேசனல் பிரஸ் இன்ஸ்டிடியூட், பத்திரிக்கையாளர்கள் குறித்த விபரங்களை சேகரித்து அளிக்கிறது. இந்த அமைப்பு அளித்துள்ள அறிக்கையின் படி, பத்திரிகை உட்பட மீடியாக்களில் பணிபுரிவோர்களுக்கு அச்சுறுத்தும் நாடாக சிரியா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 119 பேர்
இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் இதுவரை 119 ஊடகத்துறையினர் உயிரிழந்துள்ளனராம். 1997ம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த படுகொலைகளிலேயே இதுதான் அதிகம் என்கின்றது ஐபிஐ.

சிரியாவில் 36 பேர் கொலை
2012ம் ஆண்டில் சிரியாவில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதம் சிரியாவில் அரசுக்கு ஆதரவானவர்கள் நடத்திய தாக்குதலில் பிரபல பத்திரிக்கையாளர் மேரி கால்வின், பிரான்ஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

சோமாலியாவில் 16 பேர்
இதற்கு அடுத்தபடியாக சோமாலியா நாட்டில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இரு நாடுகளும் ஊடகத்துறையினருக்கு ஆபத்தை விளைவிக்கும் நாடுகள் என்று வர்ணித்துள்ளது ஐபிஐ. இதற்கு அடுத்த இடங்களில் மெக்ஸிகோ, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டுதான் அதிகம்
கடந்த ஆண்டு 103 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டனர். 2009 ம் ஆண்டு அதிகபட்சமாக 110 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 2012ல் தான் அதிக அளவில் பத்திரிக்கையாளர்கள் கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications