துபாயில் டாக்சியில் வைத்து செக்ஸ் .. இங்கிலாந்து பெண்ணுக்கு 3 மாத சிறை
அந்தப் பெண்ணின் பெயர் ரிபெக்கா பிளேக். இவர் துபாயில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல துபாயில் வெல்டராக பணியாற்றி வருபவர் கானர் மெக்ரெட்மான்ட். இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு - டாக்சி ஒன்றின் பின் சீட்டில் வைத்து செக்ஸ் உறவு கொண்டது.
இந்த இருவருக்கும் தற்போது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைக்குப் பின்னர் இருவரும் நாடு கடத்தப்படுவர்.
29 வயதான ரிபெக்கா, இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இவரும் அயர்லாந்தைச் சேர்ந்தவரான கானரும், மது அருந்தியுள்ளனர். கிட்டத்தட்ட 10 மணி நேரம் குடித்த அவர்கள் பின்னர் ஒரு டாக்சிக்குச் சென்றனர். அங்கு டாக்சியின் பின் சீட்டுக்குள் பதுங்கிய இருவரும் செக்ஸ் உறவு கொண்டதாக தெரிகிறது.
இந்த சமயம் பார்த்து அந்த டாக்சியின் டிரைவர் வந்து விட்டார். காரின் ரியர் வியூ மிர்ரரைப் பார்த்த அவர் அதில் ஒரு பெண் மேலாடை இல்லாமல் இருப்பதையும், ஒரு ஆண் மீது படர்ந்திருப்பதையும், முக்கல் முனகல் வருவதையும் பார்த்து அதிர்ந்த அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர். ஆனால் தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் நிர்வாண கோலத்தில் இருக்கவில்லை என்றும் கோர்ட்டில் இருவரும் தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக இருவருக்கும் எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனையிலும் கூட அவர்கள் உறவு கொண்டதாக ரிசல்ட் வரவில்லை.
இருப்பினும் இருவருக்கும் தலா 3 மாத சிறைத் தண்டனை விதித்து துபாய் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் இருவரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.
இருவரும் தற்போது அப்பீல் செய்யவுள்ளனர். இதையடுத்து இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.