சிஏஜி அறிக்கை விவகாரத்தில் முரளி மனோகர் ஜோஷிக்கு தொடர்புன்னு சொல்லலையே..: ஆர்.பி.சிங் பல்டி
டெல்லி: 2ஜி விவகாரத்தில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சொல்லப்படும் சிஏஜி அறிக்கையை தயாரித்ததில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு தொடர்பிருப்பதாக தாம் கூறவே இல்லை என்று தொலைத் தொடர்புத் துறையின் கணக்கு தணிக்கை இயக்குனர் ஆர்.பி.சிங் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் புயலைக் கிளப்பிய 2ஜி ஒதுக்கீட்டில் ரூ1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக சிஏஜி அறிக்கையை தயாரித்ததில் முரளி மனோகர் ஜோஷிக்கு தொடர்பு உண்டு என்று ஆர்.பி.சிங் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து பாஜகவை காங்கிரஸ் தலைவர் சோனியா வறுத்தெடுக்க ஜோஷியும் பதிலடி கொடுத்து வந்தார். ஆர்.பி.சிங்கின் பேட்டியை வைத்து நாடாளுமன்றத்தில் திமுகவும் கூட தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆர்.பி.சிங்., தாம் ஜோஷியின் பெயரைக் கூறவே இல்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அதே நேரத்தில் சிஏஜி அறிக்கையை தயாரிப்பதில் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் தலையீடு இருக்கிறது என்று மட்டுமே இண்டியன் எக்ஸ்பிரஸ் ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தேன்.. அந்தப் பத்திரிகைதான் முரளி மனோகர் ஜோஷியின் பெயரை தாமாகவே சேர்த்துக் கொண்டது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
ஆர்.பி.சிங்கின் இந்த அந்தர்பல்டி இன்னும் என்னென்ன புயலைக் கிளப்புகிறதோ!












Click it and Unblock the Notifications