தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவர் ஆட்டம் தாங்கமுடியவில்லை: சரத்குமாரிடம் கவுன்சிலர்கள் புகார்
தென்காசி: தென்காசி நகர்மன்ற தலைவியின் கணவரைக் கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நகராட்சி கவுன்சிலர்களை அத்தொகுதி எம்.எல்.ஏ. சரத்குமார் சந்தித்து பேசினார்.
நகர்மன்ற தலைவர் பானுவின் கணவர் சமீம் நிர்வாகத்தில் தலையிடுவதாகவும், அவர் கவுன்சிலர்களை மிரட்டுவதாகவும், நகராட்சியில் ஊழல் நடைபெறுவதாகவும் கூறி தென்காசி நகர்மன்ற கவுன்சிலர்கள் கூட்டமைப்பு சார்பில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் நகராட்சியில் மக்கள் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதால் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் நடிகர் சரத்குமார் நேற்று இரவு கவுன்சிலர்களை சந்தித்து பேசினார். அப்போது கவுன்சிலர்கள் பலர் பல்வேறு குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மக்கள் பிரச்சனைக்காக போராட வேண்டிய கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி அவையை நடக்க விடாமல் செய்வதால் பாதிப்பு மக்களுக்கு தான். அதனால் அனைத்து கவுன்சிலர்களும் குறைகளையும், பகைகளையும் களைந்து கூட்டம் தொடர்ந்து நடக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.












Click it and Unblock the Notifications