தமிழர்கள் போராட்டம் எதிரொலி: மலேசிய பயணத்தை ரத்து செய்தார் மகிந்த ராஜபக்சே

மலேசியாவில் டிசம்பர் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் மாநாடு நடைபெற இருக்கிறது. இம்மாநாட்டுக்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.
ஆனால் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்சேவை மலேசியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று அந்நாட்டின் பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்து வந்தன. மேலும் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக சில நாட்களுக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் "தவிர்க்க முடியாத காரணத்தால் மலேசிய மாநாட்டில் மகிந்த ராஜபக்சே கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டங்களை கைவிடுவதாக மலேசிய அமைப்புகள் அறிவித்துள்ளன.
லண்டனில் கடந்த சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மகிந்த ராஜபக்சே செல்வதும் அங்கு தமிழர்கள் எதிர்ப்பு காரணமாக மீண்டும் இலங்கைக்கே அவர் திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. இந்நிலையில் மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு காரணமாக ராஜபக்சேவின் பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications