தாயின் முதுகு தண்டை வெட்டி, 94 தடவை கத்தியால் குத்திக் கொன்ற மகன்
இங்கிலாந்தில் உள்ள வேமவுத்தைச் சேர்ந்தவர் லீ விட்டில்(42). கணவரிடம் இருந்து விவாகரத்தான அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். 3 பிள்ளைகளில் 16 வயது மகனும் அடக்கம். அவனுக்கு கத்திகள் மீது அதீத ஈடுபாடு உள்ளது. கடந்த ஜூலை மாதம் அவன் தனது தோழிகளிடம் தனது தாய் இன்னும் சில நாட்கள் தான் வாழ்வார் என்று தெரிவித்துள்ளான். அதற்கு அவர்கள் ஒருவேலை லீக்கு ஏதாவது நோய் உள்ளதோ என்று நினைத்துக் கொண்டனர்.
பின்னர் அவன் வீட்டில் தனியாக இருந்த தனது தாயை முதலில் அவரது முதுகுத் தண்டில் கத்தியால் குத்தினான். முதுகுத் தண்டில் குத்தினால் தான் அவர் எங்கும் ஓட மாட்டார் என்றே அவ்வாறு செய்துள்ளான். பின்னர் அவரை 94 முறை குத்திக் கொன்றான். அதன் பிறகு அந்த ரத்தக் கரையோடு தோழிகளை சந்திக்க சென்றுவிட்டான். அவர்கள் கேட்டதற்கு யாரோ மர்ம நபர்கள் தங்கள் வீட்டுக்குள் புகுந்து தனது தாயைக் கொன்றுவிட்டதாகக் கதை கட்டினான்.
அவனது உடலில் ஏன் ரத்தக் கரை இருக்கிறது என்று கேட்டதற்கு பயந்துபோய் பைப் வழியே இறங்கி வந்ததில் அடிபட்டுவிட்டது என்று கூறியுள்ளான். பின்னர் தான் அவன் நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. போலீஸ் விசாரணையில் தனது தாயை தானே கொடூரமாகக் கொன்றதை அவன் ஒப்புக் கொண்டான். அதன் பிறகு அவன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.